காரைநகர் இந்து கல்லூரி காணி சுவீகரிப்பு இடைநிறுத்தம்

 

காரைநகர் இந்து கல்லூரிக்கு சொந்தமான 2 பரப்பு காணி மற்றும் பொது மக்களுக்கு சொந்தமான 6 பரப்பு காணி என 8 பரப்பு காணியை கடற்படையின் எலாற கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் முயற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நில அளவை திணைக்கள அதிகாரிகளால் கடற்படையின் தேவைக்காக குறித்த காணியை அளவீடு செய்வதற்கு நேற்று காலை முயற்சிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், பொது அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து, கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

அத்துடன், பிரதேச செயலருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர்.இதனடிப்படையில் காணி அளவீடு இடைநிறுத்தப்பட்டது

யாழ்.விசேட நிருபர்

Thu, 02/18/2021 - 07:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை