மேபீல்ட் தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் மீட்பு

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கொட்டகலை மேபீல்ட் லொக்கில்  தோட்ட தேயிலை மலையில் இறந்த நிலையில் சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய நேற்று காலை 10.30மணியளவில் சிறுத்தையின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுத்தை  ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் சென்ற வாகனங்களில் மோதுண்டு இறந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மூன்று அடி நீளமுள்ள குறித்த சிறுத்தையின் சடலத்தை  நல்லத்தண்ணி விலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹற்றன் சுழற்சி நிருபர்,  நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

 

 

Thu, 02/25/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை