ரஞ்சனை பாராளுமன்றம் அழைத்துவர நடவடிக்கை

சரியான அறிவித்தல் கிடைக்குமாக இருந்தால் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர நடவடிக்கையெடுப்போமென சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.  

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அதன்போது ஏற்பட்ட சர்ச்சையின்போதே சபாநாயகர் இவ்வாறு கூறினார்.  

அவர் மேலும் தெரிவித்ததாவது, ரஞ்சன் ராமநாயக்க விடயத்தில் என்னால் உடனடியாக தீர்மானம் எடுக்க முடியாது. அது நீதிமன்றத்துடன் தொடர்புடைய விடயமே இதனால் முறையான அறிவித்தல் வருமாக இருந்தால் அவரை பாராளுமன்றத்திற்கு அழைக்க நடவடிக்கையெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

 

 

 

Wed, 02/24/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை