பருத்தித்துறை - கொழும்பு இ.போ.ச சேவை ஆரம்பம்

பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் இ.போ.ச பேருந்து சேவை கொவிட் 19 அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினத்திலிருந்து இச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இ.போ.சபையின் பருத்தித்துறை டிப்போ பொறுப்பதிகாரி தெரிவித்தார். தினமும் இரவு 8 மணிக்கு பருத்தித்துறை பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் இ.போ.ச பஸ் வண்டி நெல்லியடி கொடிகாமம் வவுனியா அநுராதபுரம் புத்தளம் ஊடாக கொழும்பைச் சென்றடையும். அங்கிருந்து இரத்மலானை வரை இச் சேவை நீடிக்கும். அதேவேளை தினமும் இரவு 8 மணிக்கு வெள்ளவத்தை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் இ.போ.ச பஸ் வண்டி கொழும்பு மத்திய பஸ் நிலையத்தை அடைந்து அங்கிருந்து இரவு 9 மணிக்கு பருத்தித்துறை நோக்கிப் புறப்படும்.

கரவெட்டி தினகரன் நிருபர்

Mon, 02/08/2021 - 13:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை