மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து மாணவியின் சடலம் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து மாணவி ஒருவரின் சடலம் நேற்று (12) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் ரத்மில்லகெலே ஜனபதய சேர்ந்த நாராயணசாமி முனுசியா என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர் தலவாக்கலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து யுவதியின் சடலம் நேற்று (12) 9.00 மணியளவில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹற்றன் விசேட, தலவாக்கலை குறூப், பூண்டுலாேயா நிருபர்கள்

Sat, 02/13/2021 - 13:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை