பிரிட்டன் தூதுவருடன் சுமந்திரன் சந்திப்பு

இலங்கைக்கான பிரிட்ட தூதுவர் சாரா ஹீல்டக்கும் தமிழ் ​தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. நேற்றுக காலை கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரை சுமந்திரன் கலந்துரையாடியிருந்தார். இச் சந்திப்பின் போது, ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் இம் முறை நடைபெறவுள்ள 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்து மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Thu, 02/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை