நெடுந்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம் படகு மீட்பு; கடற்படை தேடுதல்

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்பின் காணாமல் போனவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸார் அவர்கள் பயணித்த படகை பின்னர் மீட்டதாக தெரிவித்தனர்.

குறிகாட்டுவானிலிருந்து நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்கு திரும்பிய மீனவர்கள் இருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.

நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (வயது-20) நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த றொபின்சன் (வயது-40) ஆகிய இருவருமே காணாமற்போனவர்களாவர். அவர்களை தேடும் பணியை கடற்படையினர் முன்னெடுத்த போது படகு நெடுந்தீவு கரையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 

வேலணை குறூப் நிருபர்

Tue, 02/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை