தினகரனில் வெள்ளி தோறும் 'புலமைக் கதிர்' மாதிரி வினாத்தாள்

- புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்

கொவிட்19 தொற்று பாதுகாப்பு கருதி வீட்டில் முடங்கியுள்ள மாணவர்களின் நலன் கருதி தினகரன் வெளியிடுகின்ற, தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டி மாதிரி வினாத்தாள்கள்.

கொழும்பு இந்துக் கல்லூரி ஆசிரியரும், தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான கற்பித்தலில் அனுபவம் வாய்ந்தவருமான எஸ்.ஏ.சந்திரபவன் (B.A, Dip.in teach, PGDE) அவர்களால் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்களும், அதற்கான விடைகளும் உங்கள் தினகரனில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு வாரமும் வெளிவரப் போகின்றன.

‘புலமைக் கதிர்’ என்ற இந்த இலவச இணைப்பானது தரம் -5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு மிகுந்த பயன் தருவதாக அமையும். எதிர்வரும் 19.02.2021 முதல் தினகரனில் எதிர்பாருங்கள். உங்கள் பிரதிகளுக்கு இன்றே பதிவு செய்யுங்கள்.

(ஆசிரியர்: எஸ்.ஏ.சந்திரபவன், தொலைபேசி: 0773013062)
[email protected]

Wed, 02/17/2021 - 11:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை