சுகாதார வழிமுறை பின்பற்றாவிடின் கொரோனா சட்டம் கடுமையாக்கப்படும்

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள நடைமுறைகளை பின்பற்றாவிடின் எதிர்வரும் காலத்தில் சட்டங்களை கடுமையாக்க வேண்டி ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்கும் போது சுகாதார பிரிவினருக்கு அதனை கட்டுப்படுத்த முடியவில்லையென குற்றம் சுமத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

22 மில்லியன் மக்களையும் கவனிப்பதற்காக ஊழியர்கள் இல்லை எனவும், இதனை சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தினரினால் மாத்திரம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Thu, 02/18/2021 - 07:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை