வார இறுதி விடுமுறை தொடர்பில் சுகாதார பிரிவு, பொலிஸார் மீண்டும் அறிவுறுத்தல்

வார இறுதி நீண்ட விடுமுறை காலத்தில் மிகவும் அவதானமாகவும் சிந்தனையுடனும் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வார இறுதி விடுமுறை நாட்களில் சுற்றுலா, வைபவங்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றுகூடல் போன்ற விடயங்களில் சுகாதாரப் பிரிவினர் வகுத்துள்ள சுகாதார பரிந்துரைகளுக்கமைய செயற்படுமாறும் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகின்ற வார இறுதி நீண்ட விடுமுறையில் பின்பற்ற வேண்டிய சுகாதார பரிந்துரைகள் தொடர்பாகவும் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கருத்து தெரிவித்தார்.

 

 

Thu, 02/18/2021 - 06:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை