அரசு 'கொரோனா' தொடர்பான உண்மைகளை மறைக்கிறது

கொவிட் தொற்று தொடர்பான உண்மைத் தகவல்களை அரசாங்கம் மூடி மறைப்பதுடன் நோயாளர்களின் எண்ணிக்கை குறித்து பொய்யான தகவல்கள் கூறப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது கொவிட் தொற்று நிலைமை தொடர்பாக வழங்கப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. மரணங்கள் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கைகள் தொடர்பாகவும், சிகிச்சைப் பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் கூறுவதும் பொய்யாகும்.

நாளாந்தம் சுமார் 800 பேர் வரையிலான நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

சம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 02/10/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை