பட்டதாரிகளுக்கு இரண்டாம் கட்ட நியமனங்கள்; நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் வைபவம்

பட்டதாரிகளை பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளும் இரண்டாம் கட்டச் செயற்பாடுகளின் கீழ்,நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அண்மையில் (29) வழங்கப்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், 60 ஆயிரம் பட்டதாரிகளை பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளும் வேலைத் திட்டத்திற்கமைய, இந்நியமனங்கள் வழங்கப்பட்டன. நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 12 பட்டதாரிகளுக்கு சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் கீழ், இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் யூ.எல். ஜவாஹிர், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ்.சிவம், நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன், நிருவாக உத்தியோகத்தர் கே.யோகஸ்வரன், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித், மேலதிக மாவட்ட பதிவாளர் பி.நித்தியானந்தன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் இதில்,கலந்து கொண்டனர்.

(சென்றல்கேம்ப் குறூப் நிருபர்)

Tue, 02/02/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை