- இளைஞனது மீள் PCR பரிசோதனை செய்யக்கோரிய மனு
மரணமடைந்த பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட இளைஞருக்கு மீள பி.சி.ஆர் பரிசோதனைகளை
முன்னெடுக்கக் கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்தமையை ஆட்சேபித்து நேற்று (19) உயர் நீதிமன்றத்தில் சிறப்பு மேன் முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையிலான குழுவினர் இது தொடர்பில் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்ன கொரயா ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் இது தொடர்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தீர்ப்பறிவித்திருந்த நிலையில் மீள பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிடுமாறு இந்த சிறப்பு மேன் முறையீட்டில் கோரப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் உறுதி செய்தார்.
சுப்பிரமணியம் நிசாந்தன்
from tkn