அரசியல் ஆதரவு கோரிய இணைய கலந்துரையாடல்

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையினை நீக்கும் செயற்றிட்டத்திற்கு அரசியல் ரீதியிலான ஆதரவினை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் பிரித்தானியாவின் நியூஹாம் பகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் ரிம்ஸூடன் கெளசிகன் சசிகுமாரின் ஒருங்கிணைப்பில் செயற்பாட்டாளர்களான கிறிஸ்ரி நிலானி காண்டீபன், குணரெத்திணம் யுவராஜ், அனோஜன் சிவபாலன், ஜோர்ஜ் ஹெமில்டன் பிராவின்டன், கீதரன் ராசேந்திரா, சசிகரன் செல்வசுந்தரம் ஆகியோர் சூம் செயலி ஊடாக கலந்துரையாடினர்.

இதன்போது உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்களும் தமிழ் மக்கள் சார்பாக கருத்துக்களை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்து கூறியிருந்தனர் .

Sat, 02/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை