புதிய கொரோனா தொற்றாளர் உள்ள பகுதிக்கு பயணக் கட்டுப்பாடுகள்

- விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி

நாட்டில் இனங்காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் வசிக்கும் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இப் பகுதிகளுக்கு வெளியே வைரஸ் பரவுவதை குறைப்பதற்காக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்புடன் நடந்துகொள்வது அவசியமாகும் என்றார். இதேவேளை பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ், கொழும்பு, அவிசாவளை, வவுனியா மற்றும் பியகம ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 02/16/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை