அமைச்சர் பவித்ரா தேறி வருகிறார்

கணவர் காஞ்சன ஜயரத்ன தகவல்

ஐ.டீ.எச்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற சுகாதார சுதேச வைத்திய அமைச்சரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாரச்சி சுகமடைந்து வருவதாக சப்ரகமுவ மாகாண சபை தலைவரும் அவரது கணவருமான காஞ்சன ஜயரத்ன நேற்று தெரிவித்தார்.

அமைச்சரின் உடல் நிலை தொடர்பி ல் நேற்று ஊடகங்களுக்கு தகவல் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து தகவல் தருகையில், கோவிட் வைரஸ் தொற்ற ஏற்பட்டதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக அவர் விரைவாக தேறி வருகிறார். வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவுடன் அமைச்சர் தனது கடமைகளை வழமைபோல் தொடர்ந்து நடத்துவார் எனவும் அவர் தெரிவித்தார்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Mon, 02/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை