சோமாலிய ஹோட்டலில் தாக்குதல்: 9 பேர் பலி

சோமாலிய தலைநகர் மகடிசுவில் ஹோட்டல் ஒன்றின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அல் கொய்தா அமைப்புடன் தொடர்புபட்ட அல் ஷபாப் போராளிகளால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை பாதுகாப்புப் படையினர் நேற்றுக் காலை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தற்கொலை கார் குண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதை அடுத்து, அப்ரிக் ஹோட்டலில் அல் ஷபாப் போராளிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் நேற்றுக் காலை வரை நீடித்தது.

“படை நடவடிக்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நான்கு தாக்குதல்தாரிகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்திருப்பதோடு 10 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது” என்று பொலிஸ் பேச்சாளர் சாதிக் அலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tue, 02/02/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை