அமெ. பனிப்புயல்: 21 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் வரலாறு காணாத பனிப்புயலால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மில்லியன் கணக்கானோருக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல பகுதிகளில் கொவிட்–19 தடுப்பூசி போடும் பணியும், அதன் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடுங்குளிரால் காற்றாலைகளின் செயல்பாடு முடங்கியது. எனவே, மின்சாரத் தேவையை ஈடுகட்ட முடியாமல் நிறுவனங்கள் திணறின. கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசாங்கம் அவசர உதவியளிக்கத் தயார் என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கடுங்குளிர் நாளை வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Fri, 02/19/2021 - 15:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை