தேங்காய் தலையில் விழுந்து 15 வயது சிறுமி மரணம்

தேங்காயொன்று தலையில் விழுந்து படுகாயமடைந்த 15 வயதான சிறுமி ஸ்தலத்திலேயே மரணமான சம்பவம் ஒன்று கொடக்கவெல வெல் பொனியாய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இச் சிறுமி தனது தாயுடன் முற்றத்தில் நடந்து செல்கையில் அருகில் இருந்த தேங்காய் மரத்திலிருந்து சிறுமியின் தலையில் ஒரு தேங்காய் விழுந்ததால் நேற்று முன்தினம் இப்பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அஹிம்சா தெவ்மினி என்ற 15 வயதுடைய பாடசாலை சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலை க்கு எடுத்து சென்ற போதிலும் அவர் மரணமடைந்திருந்தார் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Tue, 02/16/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை