சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத 1000 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

சுகாதார வழி முறைகளை முறையாக பின்பற்றாத ஆயிரம் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 10ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 10 ஆயிரத்து 335 அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் 1268 நிறுவனங்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமை இனங்காணப்பட்டுள்ளது.

அதற்கிணங்க அந்த நிறுவனங்களின் தலைவர்கள், முகாமையாளர்கள் அல்லது நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு ஆயிரத்துக்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 02/03/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை