தாயின் உடலை 10 ஆண்டுகள் மறைத்து வைத்திருந்தவர் கைது

தனது இறந்த தாயின் உடலை பத்து ஆண்டுகளாக தனது மாடிக் குடியிருப்பின் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த பெண் ஒருவரை ஜப்பான் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தாயாரின் மரணம் கண்டுபிடிக்கப்பட்டால், தாம் வீட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் என்று அஞ்சியதால் சடலத்தை உறையவைத்ததாக 48 வயது யுமி யோஷினோ குறிப்பிட்டுள்ளார்.

டோக்கியோவில் வாழும் அவர், தனது தாயாருடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். தாயாரின் பெயரில் வீடு பதிவுசெய்யப்பட்டிருந்ததால் யோஷினோ வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் சாத்தியம் இருந்தது.

இருப்பினும் அவர் பல மாதங்களாக வீட்டு வாடகையைச் செலுத்தவில்லை என்பதால் அவர் இம்மாத நடுப்பகுதியில் வெளியேற்றப்பட்டார். அப்போது வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி ஒன்றில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது பின்னர் யோஷினோவின் தாயாரின் சடலம் என்று அடையாளம் காணப்பட்டது.

Mon, 02/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை