அமரர் SWRD பண்டாரநாயக்கவின் 122 ஆவது ஜனன தினம் நேற்று

முன்னாள் பிரதமர் மறைந்த எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 122 ஆவது ஜனன தினம் நேற்று காலிமுகத்திடலிலுள்ள அமரர் பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு முன்பாக நினைவு கூரப்பட்டது.

இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் சுனேத்ரா பண்டாரநாயக்க ஆகியோர் முதலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அத்துடன் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அமரர் பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

Sat, 01/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை