எம்.பிக்கள்,பணியாளர்களுக்கு இன்றும் PCR பரிசோதனை

பாராளுமன்றத்தில் இதுவரை 448 பேரிடம் சோதனை

பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பாராளுமன்ற ஊழியர்களுக்கு இன்றும் பீசீஆர் பரிசோதனை நடத்தப்பட இருப்பதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார். ஏற்கெனவே பாராளுமன்ற பொதுச் செயலாளர் உள்ளிட்ட 448 ஊழியர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

சபாநாயகர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மீண்டும் இன்று (15) காலை 9 மணி முதல் 12 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாராளுமன்ற பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. பாராளுமன்றத்தில் நோய் தொற்று நீக்கத்திற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேவேளை ஆளும் தரப்பு பிரதம கொரடா அலுவலகமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அடுத்த 19 ஆம் திகதி பாராளுமன்றம் கூட உள்ளது தெரிந்ததே.

Fri, 01/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை