இரு மாத குழந்தையின் தகனம்; அலிசாஹிர் மெளலானா தந்தையுடன் உரையாடல்

வெலிகமவில் பெற்றோரின் சம்மதத்தை பெறாமல் இரண்டு மாத குழந்தையின் உடலை அதிகாரிகள் தகனம் செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தனது ட்விற்றரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அவர் அதில் தெரிவித்துள்ளதாவது,

வெலிகமவில் கட்டாய தகனத்திற்கு உட்படுத்தப்பட்ட இரண்டு மாத குழந்தை மொஹமட்டின் தந்தை நியாசுடன் உரையாடினேன்.

பிறந்த முதல் குழந்தை முகமத், சுவாச இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களாக கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையிலும் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன இதற்கான ஆவணங்களுள்ளன. அதேவேளை 25 ஆம் திகதி முகமதின் தாய் சிஹானா உயர் இரத்த அழுத்தம் உட்பட பல பாதிப்புகள் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்த்துக்கொள்வதற்கு ஒருவரை ஏற்பாடு செய்த தந்தை தனது மகனுடன் வீட்டிலிருந்துள்ளார்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின்னர் அவரை மருத்துவமனையில் பராமரித்த பெண் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளாரென என்ற தகவலை மருத்துவமனை தெரிவித்துள்ளது. வேறு பல நோயாளிகளை பராமரித்ததன் காரணமாக அவர் கொரோனாவினால் பாதிக்கப்ட்டுள்ளார். இதனை தொடர்ந்து சிஹானாவை தனிமைப்படுத்தலிற்காக வருமாறு மருத்துவமனையிலிருந்து அழைத்துள்ளனர்.

அவர் மருத்துவமனைக்கு சென்றவேளை அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளாரென தெரிவித்தனர்.ஆனால் அது தொடர்பான ஆவணங்களை அவர்கள் பார்க்கவில்லை.

எனினும் பிசிஆர் சோதனையில் அவர் பாதிக்கப்படவில்லையென்பது உறுதியான பின்னர் அவர் வீடு திரும்பினார்.

13ஆம் திகதி குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் 14 ஆம் திகதி மாலை வெலிகமவில் உள்ள வலன மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச்சென்றனர்.

குழந்தையை மாத்தறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர்கள் தந்தையை வீட்டில் தனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு கேட்டுள்ளனர். பின்னர் குழந்தை இறந்த செய்தி மருத்துவமனையிலிருந்து கிடைத்துள்ளது, மருத்துவமனை கொரோனா வைரஸ் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.

தந்தை உறவினர்களை மருத்துவமனைக்கு செல்லுமாறு கேட்டுள்ளார்.மருத்துவமனைக்கு சென்ற உறவினர்கள் குழந்தை கொரோனாவினால் பாதிக்கப்படவில்லையென மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் குழந்தையின் உடல் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்புகின்றனரென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் மீண்டும் அழைத்த உறவினர்கள் காலி கராப்பிட்டிய மருத்துவமனையிலும் குழந்தை கொரோனாவினால் பாதிக்கப்படவில்லையென்பது உறுதியாகியுள்ளதென தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் உடலை மீண்டும் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்துமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tue, 01/19/2021 - 08:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை