மினுவாங்கொடை, மாத்தளையில் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்

மினுவாங்கொடை, மாத்தளையில் பகுதிகளில் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்-Isolation Status Update-Minuwangoda-Matale-Isolated-Kalutara-Beruwala-Released-NOCPC

- களுத்துறை, பேருவளை பொலிஸ் பிரிவுகளில் சில இடங்கள் விடுவிப்பு

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து மினுவாங்கொடை, மாத்தளை பொலிஸ் பிரிவுகளிலுள்ள ஒரு சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

அத்துடன், களுத்துறை மற்றும் பேருவளை பொலிஸ்  பிரிவுகளிலுள்ள ஒரு சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 01/17/2021 - 16:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை