வளவை கங்கையில் சடலம் மீட்பு

வளவை கங்கையில் இருந்து இரத்தம் தோய்ந்த சடலம் ஒன்றை  பொலிஸார் மீட்டுள்ளனர். பலாங்கொடை ஹம்பேகமுவ தம்வெல்ஓடய என்ற இடத்தில் ஆற்றில் மிதந்த நிலையில் சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சடலத்தின் பல இடங்களில் இரத்தக்கறைகள் காணப்பட்டுள்ளதுட ன் ஆற்றங்கரையிலும் சில வெளியிடங்களிலும் நிலத்தில் சுமார் 1 1/2கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மரக்கறித் தோட்டக் கொட்டில் ஒன்றிலிருந்து இச்சடலத்தை இழுத்து வந்து அடையாளம் காணப்பட்டதாகவும்  பொலிஸார்  தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இவர் பலாங்கொடை தஞ்சந்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த வசந்த குமார (49 வயது) என்ற 3 பிள்ளைகளின் தந்தை என உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.ஹம்பேகமுவ பொலிஸார்   மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Wed, 01/20/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை