அமைச்சர் பவித்ரா தனிமைப்படுத்தலில்
கொரோனா தொற்றுக்கு உள்ளான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பூரண குணமடைந்து சிகிச்சை நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கொரோானா தொற்று காரணமாக ஹிக்கடுவை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இரு வாரங்களுக்கு முன்னர் ராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜெயசேகரவிற்கு முதலில் கொரோனா தொற்றியதோடு தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, ராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கும் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இவர்களின் ஆளணி அங்கத்தவர்களுக்கும் பீசீஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.பாராளுமன்றத்தில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து எம்.பிக்கள் பலருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது தெரிந்ததே. (பா)
from tkn