அமைதிக்கான நினைவு சின்னமே அவசியம்

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்ப்பு தொடர்பாக அறிக்கை

யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி நாட்டின் ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலாக காணப்பட்டது. நாட்டிற்கு யுத்த நினைவுச் சின்னங்கள் அவசியமில்லை, சமாதான நினைவுச் சின்னங்களே அவசியம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் நினைவுத்தூபியை அகற்றுவதற்கு வெள்ளியிரவே தீர்மானித்தார். 2018இல் உருவாக்கப்பட்ட இந்த நினைவுத்தூபி பின்னர் மெருகூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொடர்ந்து பேசிய அவர்,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா இன்று இலங்கையிலுள்ள அருமையான திறமைமிக்க தலை சிறந்த உபவேந்தர். அத்தோடு மிகவும் திறமையான நிர்வாகி. சமீபகாலப்பகுதியில் நான் கண்ட திறமைமிக்க உபவேந்தர்.  இந்த நினைவுத் தூபி இன்றைய சூழலுக்கு பொருந்தாது என்பதினால் அதனை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்குவதற்கான முடிவானது.

தற்பொழுது பல்கலைக்கழக கட்டமைப்பில் கற்கும் மாணவர்கள், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட காலப்பகுதியில் 9, 10 மற்றும் 11 வயதைக் கொண்டிருந்த எமது மாணவர்கள் ஆவர். தமிழ் , சிங்களம் அல்லது முஸ்லிம் எந்தவொரு இனத்திற்கு அல்லது மதத்திற்கு உட்பட்டவராக இருந்த போதிலும் இலங்கையர்களாகிய எமது பிள்ளைகள் இவர்கள்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் சுமார் 1500 பேர் கல்வி கற்கின்றனர். அத்துடன் தெற்கிலுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆகக் குறைந்த 600 இற்கும் 700 இற்கும் இடைப்பட்ட தமிழ் மாணவர்கள் விசேடமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலிருந்து வரும் தமிழ் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதில் எமக்குள்ள முக்கியத்துவமான விடயம் தான் எமது மாணவர்கள் மத்தியில் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதாகும்.

இதன் காரணமாக எமக்கு முன்பிருந்த அந்த அனுபவங்களை எதிர்காலத்திலும் காண்பதற்கு ஏற்படாது என்பதற்கு எமக்கு உள்ள ஒரே ஒரு காரணி தான் இந்த மாணவர்கள் மத்தியிலுள்ள ஐக்கியம் , சமாதானம் ஆகும். இவர்கள் இருப்பது பொதுவான சாதாரண விடுதிகளில் ஆகும். இவர்கள் கலந்துகொள்வது பொதுவான விரிவுரைகளிலாகும். இவர்களது விளையாட்டு நடவடிக்கைகள் போன்ற அனைத்தும் இடம்பெறுவது பொதுவானதாகவே இடம்பெறுகிறது.

இதுவரையில் எந்தவொரு பிரச்சினையும் இந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெறாதிருப்பதற்கு மாணவர்களே பொறுப்பாக இருப்பது தொடர்பில் நாம் நாடு, இனம் என்ற ரீதியில் உண்மையிலேயே அதிஷ்டமானவர்கள்.

நான் நினைக்கும் வகையில் இது மிகவும் காலத்திற்கேற்ற நடவடிக்கையாகும்.

Mon, 01/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை