வவுனியாவில் வீதி புனரமைப்பு சீரின்மையால் புதையுண்ட டிப்பர்

வவுனியா சாந்தசோலை இரண்டாம் குறுக்கு தெரு வீதி புனரமைப்பு சீரின்மையால் நேற்று (06) பிற்பகல் டிப்பர் வாகனம் ஒன்று அதிகூடிய பாரம் காரணமாக வீதியில் புதையுண்டுள்ளது .

சாந்தசோலை இரண்டாம் குறுக்குத் தெரு தமிழ் தெற்கு பிரதேச சபையின் நிதி உதவியில் கடந்த வருடம் கிரவல் நிரப்பப்பட்டு பாதை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது . எனினும் அண்மையில் பெய்த மழை மற்றும் கனரக வாகனத்தின் கூடிய பாரம் காரணமாக வீதியில் அமைக்கப்பட்ட மதகுக்கு மேல் பயணித்த டிப்பர் ஒன்று தாழ் இறங்கியுள்ளது. எனினும் இரண்டு மணிநேரத்தின் பின்னர் ஜே.சி.பியின் உதவியுடன் புதையுண்ட டிப்பர் வாகனம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து சற்று நேரம் தடைப்பட்டிருந்தது .

எனினும் கிரவல் நிரப்பி புனரமைப்பு சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் குறித்த வீதிகளில் மழையுடன் கிரவல் அள்ளுண்டு சென்றிருப்பதையும் காணமுடிந்துள்ளது .

ஓமந்தை விஷேட நிருபர்

Fri, 01/08/2021 - 06:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை