யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூர பொதுவான நினைவுத்தூபி அவசியம்

யாழ். பல்கலைக்கழக சம்பவம் குறித்து அமைச்சரவையில் பேசுவேன்

யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உரிய அனுமதி பெறப்படாமல் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட காரணத்தினாலேயே அந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நீண்ட காலத் திட்டமிடலின்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்கின்ற தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவமும் வெளிப்படுத்தியுள்ளதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுவான தூபி அமைக்கப்பட வேண்டுமென்ற தனிநபர் பிரேரணை கொண்டு வந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் பிரதிநிதிகளின் போதிய ஒத்துழைப்பு இன்மையினால் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியவில்லையென்றும் தெரிவித்தார்.எதிர்வரும் அமைச்சரவையில் இவ் விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்க இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 

 

Mon, 01/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை