யாழ்.உடுவில் பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

கொரோனா காலத்தில் மக்களுக்கு நிம்மதியின்மை   

யாழ்.உடுவில் - அம்பலவாணர் வீதி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த ரவுடிக் கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் 07ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

வயோதிபப் பெண் ஒருவரும் அவருடைய மகனும் வசிக்கும் வீட்டுக்குள் புகுந்தே இவ்வாறு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

05 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், முகங்களை மறைத்தவாறு வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பெறுமதியான இலத்திரனியல் பொருள்கள் உட்பட வீட்டிலிருந்த பொருள்களை அடித்து நொருக்கிச் சேதமாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. கொழும்பிலிருந்து வந்து வாடகை வீட்டில் தங்கியிருக்கும் தாயும், மகனும் அங்கு நீண்டகாலமாக வசித்து வரும் நிலையில், அவர்கள் எந்தப் பிரச்சினைக்கும் செல்வதில்லையென்றும் அயலவர்கள் கூறுகின்றனர். சம்பவம் தொடர்பாகச் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Sat, 01/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை