வடக்கு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

வடக்கு ரயில் சேவைகள் மீள ஆரம்பமாகியுள்ளதாக யாழ்ப்பாண ரயில் நிலையம் பிரதம ரயில் அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு ரயில்கள் புறப்படுகின்றன.

முதலாவதாக காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30க்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10க்கு புறப்படுகின்ற உத்தரதேவி கடுகதி ரயிலும், காங்கேசன்துறையில் இருந்து காலை 9மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45க்கு புறப்படும் யாழ் தேவி ரயில் சேவைகளும் ஆரம்பமாகியுள்ளன.

அவ்வாறே கல்கிசையில் இருந்து 5.55க்கும் , 6.35க்கு கொழும்பிலிருந்தும் புறப்படும் யாழ் தேவி ரயிலும், 11.50க்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி ரயிலும் சேவையை ஆரம்பித்துள்ளன.

ஏனைய ரயில் சேவைகள் 25ஆம் திகதி தொடக்கம் முக்கியமாக கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட ரயிலும், இரவு தபால் ரயில் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் படிப்படியாக ஆரம்பமாகும்.

பொதுமக்கள் வழமைபோன்று ஆசனங்களை யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியும்.

அத்தோடு உங்களுக்கு தேவையான ஏதாவது விபரங்களுக்கு 021 2222271 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும். பயனிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ரயில் பயனத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Tue, 01/19/2021 - 13:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை