பிரித்தானிய கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்படலாம்

சுகாதார பிரிவு எச்சரிக்கை

பிரிட்டனில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மரபணு இலங்கையில் அடையாளம் காணப்பட்டிருப்பது விசேட அம்சமாகுமென தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவக் கூடியதென்பதனால் இலங்கையில் நோயாளிகளின் எண்ணிக்கை பாரியளவு அதிகரிக்குமென மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.நோயாளிகளின் எண்ணிக்கை பாரியளவு அதிகரிப்பதுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடுமென அவர் ேமலும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலைமையை இலங்கையின் சுகாதார கட்டமைப்பினால் தாங்கிக் கொள்ள முடியாதென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மரபணு மாறிய வைரஸ் பாரிய அளவு பரவினால் மிகவும் ஆபத்தான நிலைமை ஒன்று ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Fri, 01/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை