இரா. சாணக்கியன் எம்.பிக்கு நாடாளுமன்றினால் புதிய நியமனம்

நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் பங்குகொள்ளும் முகவர் நிறுவனங்களினது நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆலோசனைக் குழு உறுப்பினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணாக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தினால் இவர் இக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்தனவினால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் பங்குகொள்ளும் முகவர் நிறுவனங்களினது நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆலோசனைக் குழுவாகும். இதில் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் அடங்குகின்றன.14 உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழுவின் முதலாவது கூட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

 

Fri, 01/08/2021 - 13:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை