அம்பானியை முந்தினார் சீனாவின் தொழிலதிபர்

சீனாவில் தண்ணீர் போத்தல் நிறுவன தலைவரான சோங் சான்சன் முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் பெரும் பணக்காரர் ஆகியுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த சோங் சான்சன் வாண்டாய் பயாலஜிக்கல் பார்மசி, நோங்பு ஸ்பிரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவர் ஆவார். இவரது நிறுவனங்கள் ஊடகம், காளான் வளர்ப்பு, நலவாழ்வு ஆகிய துறைகளிலும் காலூன்றி யுள்ளன.

புளூம்பெர்க் நிறுவனத்தின் கணக்குப்படி இந்த ஆண்டில் இவரின் சொத்து மதிப்பு 7 பில்லியன் டொலர்கள் அதிகரித்து 77.8 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. இதனால் சொத்து மதிப்பில் இந்தியாவின் முகேஷ் அம்பானியை முந்தியுள்ள சோங் சான்சன், ஆசியாவின் பெரும் பணக்காரராக விளங்குகிறார்.

உலக அளவில் பதினோராவது பெரும்பணக்காரராகவும் அவர் உள்ளார். ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 76.9 பில்லியன் டொலர்களாக உள்ளது.

Fri, 01/01/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை