முட்டை உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

- பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் நேரடி தலையீட்டில் பல்வேறு நிவாரணங்கள் 

முட்டை உற்பத்தியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கிணங்க பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த ராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். 

பாரிய மற்றும் சிறு முட்டை உற்பத்தியாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இணையதளத்தில் சூம் தொழில்நுட்பத்தின் மூலம் விசேட பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதன் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மேற்படி பணிப்புரையை விடுத்துள்ளார். 

முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அதன்போது பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அதற்கிணங்க அவர்களுக்கான கடன் சலுகை பெற்றுக்கொள்ளும் வசதியை உடனடியாக மேற்கொண்ட பிரதமர் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்  

Tue, 01/12/2021 - 12:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை