படைப்புழுவால் சோளச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து மதிப்பீடு

சேனா படைப்புழு காரணமாக சோளச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை இந்தப் போகம் நிறைவு பெற்றதன் பின்னர் மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.  

அறுவடையின் பின்னரே சேதங்களை மதிப்பீடு செய்ய முடியும். எதிர்வரும் போகத்தில் ஒரே காலப்பகுதியில் சோளச் செய்கையை ஆரம்பிக்க விவசாயிகள் அறிவுறுத்தப்படவுள்ளனர். இம்முறை செய்கை தாமதமடைந்தமையும் இந்தப் படைப்புழுவின் தாக்கத்திற்கு ஒரு காரணமாகும்.  

இந்த அனைத்துத் துறைகளையும் நிவர்த்தி செய்து எதிர்வரும் போகத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது பற்றி விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.  

Tue, 01/12/2021 - 16:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை