கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் மாணவி சடலமாக மீட்பு

கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் 11.30 மணியளவில் ஸ்கந்தபுரம், 2ம் வாய்க்கால் பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இப்பகுதி பாடசாலை ஒன்றின் உயர் தர வகுப்பு மாணவியான சந்திரமௌலீஸ்வரன் கிரிஜா வயது 18 என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டவர். இச்சம்பவம் தொடர்பாக அக்கராயன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு குறூப் நிருபர்

 

Fri, 01/22/2021 - 16:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை