கருத்துச் சுதந்திரம் அச்சுறுத்தப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி அமைதி ஆர்ப்பாட்டம்

ஜனநாயகத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் சுதந்திரம் வழங்க வேண்டும் எனக் கோரி ஐக்கிய மக்கள் சக்தி, ஏற்பாடு செய்திருந்த அமைதியான ஆர்ப்பாட்டம், அண்மையில் (24 ) அநுராதபுரம் புதிய பேருந்து நிலைத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கருத்துச் சொல்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள உரிமை மதிக்கப்பட வேண்டும் எனக் கோரியே,இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஹரின் பெர்னான்டோவின் உயிருக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஊடகங்களும் அச்சுறுத்தப்படுகின்றன. யாரும், எவரையும் விமர்சிப்பதற்கும் கருத்து தெரிவிப்பதற்கும் சுதந்திரம் வேண்டும். தற்போது நியாயமற்ற விதத்தில் ரஞ்சன் ராமநாயக்க சிறை வைக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள திருட்டு ஊழல் மோசடிகள் தொடர்பில் பேசுகையில், அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் இதில் கலந்து கொண்ட அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்தார்.

(அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்)

Wed, 01/27/2021 - 11:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை