முன்னாள் ஜனாதிபதிக்கு கட்டட திறப்பு விழாவில் முன்னுரிமை அளித்து கௌரவம்

'கிராமத்துடன் உரையாடல்' திட்டத்திற்கு இணையாக மெதிரிகிரியவில் உள்ள பிசோபுர மகாவலி ஆரம்பப் பாடசாலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இப்பாடசாலையை நிர்மாணிப்பதற்கு முக்கிய பங்காற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதனை திறந்து வைக்க அழைத்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நோக்கி திரும்பி, இது கட்டப்படுவதற்கு காரணமாகயிருந்தவரே இதனை திறந்துவைக்க வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கட்டடத்தை திறந்து வைத்தார்.

பொலனறுவை மெதிரிகிரியவில் நேற்று முன்தினம் இந்த ஆச்சரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Mon, 01/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை