திலீபனின் சகோதரர் கொரோனாவுக்கு பலி

திலீபனின் சகோதரர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் போராட்டத்தில் இணைந்து இந்திய அரசுக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தவர் திலீபன்.

இவரது சகோதரரான இராசையா அசோகன் கனடாவில் வசித்துவந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்தார்.

அங்கு நோய்த்தொற்றின் வீரியம் காரணமாக அசோகன் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

Mon, 01/11/2021 - 08:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை