நோர்வே நிலச்சரிவில் நான்கு சடலங்கள் மீட்பு

நோர்வேயில் இடம்பெற்ற பாரிய நிலச்சரிவில் வீடுகள் சோதமான நிலையில் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலச்சரிவில் உயிரிழந்த முதலாமவரின் உடல் கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட. 31 வயதான ஈரிக் க்ரோனோலன் என்பவரின் உடலே இவ்வாறு மீட்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை மேலும் மூன்று உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த புதன்கிழமை மலைப்பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவின் சேற்று மண்ணில் வீடுகள் புதையுண்டன. தொடர்ந்து ஆறு பேர் காணாமல்போன நிலையில் உள்ளனர்.

உறையும் குளிருக்கு மத்தியிலும் உயிர் தப்பியவர்களைத் தேடி மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் தொடர்ந்தும் உயிர் தப்பியவர்களை கண்டுபிடிக்கும் சாத்தியம் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Mon, 01/04/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை