இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ். நகரில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக நேற்றுக் காலை 11 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது, விவசாயிகளின் போராட்டம் இந்திய - இலங்கை எதை நோக்கி என்று புரிந்துகொள்வோம், ஒன்றிணைவோம், போராடுவோம்.'உணவளிப்போரது உயிரோடு விளையாடதே உலகமே எதிர்த்து நிற்கும்' போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டமானது நாடளாவிய ரீதியில் மாவட்டம் தோறும் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்தில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்பு சார்ந்த இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Wed, 01/27/2021 - 10:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை