- காதர் மஸ்தான் எம்.பியின் முயற்சிக்கு வெற்றி
கடந்த 2020பாராளுமன்ற பொதுத்தேர்தலில் புத்தளத்தில் வசித்து வரும் சுமார் 7000இற்கும் மேற்பட்ட வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தங்களது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக புத்தளம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனர்.
தற்போது இவர்களது பெயர்கள் சொந்த மாவட்ட வாக்காளர் பதிவேட்டில் இருந்து இவர்களது விருப்பதிற்கு மாறாக நீக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த விடம் குறித்து வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரையும், ஆணையாளரையும் நேரில் சென்று சந்தித்து இரண்டு பக்கங்கள் கொண்ட கடிதங்களையும் கையளித்துள்ளார்.
உரிமைக் கோரிக்கை படிவம் விண்ணப்பிக்கும் திகதி முடிவடைந்த நிலையில் இந்த திகதியை மேலும் பத்து நாட்களுக்கு அதாவது இம்மாதம் 29ம் திகதி வரை நீடிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எடுத்த முயற்சிக்கு வெற்றியளித்துள்ளது.
எனவே வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வசித்து வருகின்ற மக்கள் தமது உரிமை கோரிக்கை படிவத்தை இம்மாதம் 29 திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
from tkn