24 மணி நேரத்தில் 06 இலட்சம் பேர் பாதிப்பு
சர்வதேச அளவில் கடந்த 24 மணி நேரத்துள் 05 இலட்சத்து 85 ஆயிரத்து 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 09 கோடி 65 இலட்சத்து 99 ஆயிரத்து 687 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்றினால் 20 இலட்சத்து 63 ஆயிரத்து 981 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதேவேளை, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் தரவரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
இதுவரை மொத்தமாக இங்கு இரண்டு கோடியே 48 இலட்சத்து 06 ஆயிரத்து 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
from tkn