குண்டுதாரியின் தந்தைக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட அலாவுதீன் அஹமட் முவாத் என்பவரின் தந்தையை எதிர்வரும் 02 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது. இவ் வழக்கு (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹாலினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குண்டுதாரியின் தந்தையான அஹம்மத் லெப்பே அலாவுதீன் எனும் நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை கவனத்திற் கொண்ட நீதிபதி இந் நபரை எதிர்வரும் 02 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

 

Thu, 01/21/2021 - 08:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை