பிரான்ஸ் குடியுரிமை கோரும் பிரிட்டன் பிரதமரின் தந்தை

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தந்தை, பிரான்ஸ் நாட்டு குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான தமது உறவைத் தொடரும் நோக்கில், அந்த முடிவை எடுத்துள்ளதாக 80 வயதாகும் ஸ்டான்லி ஜோன்சன் கூறினார்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான அவர், 2016ஆம் ஆண்டில் பிரிட்டன் ஒன்றியத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று வாக்களித்தார்.

தமது தாய், தாத்தா, பாட்டி உள்ளிட்ட முன்னோர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதன் மூலம் தமக்குச் சொந்தமானதை மீட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

அவருடைய மகனான பிரதமர் பொரிஸ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று பிரசாரம் செய்ததில் முன்னணி வகித்தார்.

அதிகாரக் கெடுபிடி மிக்க ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி, பிரிட்டன் தனி அரசுரிமை பெற்ற நாடாக மாறினால் அதிக நன்மைகளைப் பெற முடியும் என்று அவர் பிரசாரம் செய்துவந்தார். பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும்.

Sat, 01/02/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை