சாய்ந்தமருது கலைஞர்கள் சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு

சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்த சுவதம் விருதளித்து கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை (27) சாய்ந்த மருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஐ.எம். றிகாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம். லத்தீப் கலந்து கொண்டார்.

இசை துறைக்கு பாடகர் ஏ.ஏ. கபூர், பாடகர் ஏ.எல்.எம். தன்சில், பொல்லடிதுறைக்கு ஏ.எஸ்.அன்வர், தற்காப்பு கலை எம்.எஸ்.எம். பர்ஸான், நாடகத்துறை ஏ. றனுபா, புகைப்பட துறை ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீன், அபிநயம் பல்துறை கலைஞர் என்.எம். அலிகான், அறிவிப்புத்துறை ஆசிரியர் ஏ.எல். நயீம், கவிதை நாகூர் நஹீம், வைத்தியர் சனூஸ் காரியப்பர் ஆகிய 10 கலைஞர்கள் சுவதம் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சுகாதார வழிமுறைகளை பேணி நடைபெற்ற இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிகா, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றிம்ஸான், கிராம சேவக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஜஃபர், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களான ஏ.எச். சபிக்கா, ஏ.அஸ்ரப், யூ.கே.எம். றிம்ஸான் உட்பட சாய்ந்தமருது கலாச்சார அதிகாரசபை முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது தினகரன் நிருபர்

Fri, 01/29/2021 - 07:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை