ஆத்திரத்தில் வீதியில் குப்பைகளை கொட்டிய செல்வகந்தை தோட்ட மக்கள்

பொகவந்தலாவ , செல்வகந்தை தோட்டப் பகுதி மக்கள் ஸ்ரீபுர மற்றும் ஆரியபுர வீதியில் குப்பைகளை கொட்டியுள்ளதால் இப்பகுதி வீதியில் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

செல்வகந்தை தோட்டப் பகுதியில், தேயிலை மலை ஓரங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையிலும் நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட ஸ்ரீபுர மற்றும் ஆரியபுர பகுதி குடியிருப்பாளர்கள் குப்பைகளைக் கொட்டுவதால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகின்றது. இதனால், தோட்ட மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு முகம்கொடுகின்றனர். எனவே ஆத்திரமுற்ற தோட்ட மக்கள் அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு எதிர்ப்பை தெரிவித்து ஸ்ரீபுர மற்றும் ஆரியபுர வீதியில் கொட்டியுள்ளனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Wed, 01/06/2021 - 13:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை