புத்தளம் பகுதியில் திடீரென உட்புகுந்த கடல் நீர்

முத்துபந்தி தீவு கடல்நீரால் மூழ்கியது

 புத்தளம் மாவட்டம் முத்துபந்தி தீவிலுள்ள வீடுகள் கடல் நீரில் மூழ்கியுள்ளன. சுமார் மூன்றடி உயரமான கடல் தீடீரென கரை புகுந்ததாக புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். தீவின் பாதுகாப்புக் காக அமைக்கப்பட்டிருந்த கல் வேலியில் இருந்த கற்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளன. கடல் அலையுடன் வந்த குப்பைகள் வீடுகளுக்கு அருகில் குவிந்து கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுனாமி ஏற்பட்ட போது கூட இந்தளவு கடல் நீர் தீவுக்குள் வரவில்லையென அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம் கூட இந்தளவு பாரிய அலைகள் ஏற்படுமென முன்கூட்டிய அறிவித்திருக்கவில்லையெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

Sat, 01/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை